Sunday, August 24, 2008

மாமாவுக்கு கல்யாணம்.. திருமண வாழ்த்து..

************************************************************************************

என் அத்தை மகன்,என்னைவிட நான்கு வயது மூத்தவர்,நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்திருந்த சமயம் அவருக்கு திருமணம் நிச்சயைக்க பட்டது
அந்த செய்தி கிடைத்ததும் நான் அவருக்கு எழுதிய கடிதம்

குறிப்பு:
அவரின் தொழில் வீடுகளுக்கு வர்ணம் பூசுவது(பெயிண்டர்),பட்டி,தின்னர் ஆகியவை வர்ணம்பூசுவபர்கள் பயன்படுத்துவது
மணப்பெண்னின் பெயர் சத்யா
*
மாமா உனக்கு இப்போ
மாங்கனி கசக்குமே?
மாப்பி(ள்)ள எம்பேச்சு
மட்டும் இனிக்குமா???
சத்தியமா சொல்லு
சத்யா பேச்சுபோல
வருமா??   ( இல்லவே இல்லை )



அவுங்க அழைப்பு
இல்லாட்டி -
செல்போனும் செங்கல்லாகுமே!

கண்ணை மூடினாலும்
மூடாட்டியும் -
கனவுவந்து கபடியாடுமே!!

உன்வீட்டு கண்ணாடியும்
உன்னை -
அழகாய் காட்டுமே!!! (வேறு வழி)



சாப்பிட தோனுமா? -
என்அத்தை அவ(ள்)
சமைத்தால் இனி ருசிக்குமா??
(சீசீ...... உவேவே....)ஏட்டு சுரக்காய்
கறிக்கு உதவாது -
cell-ல் ஊட்டிவிட்டால்
வயிறு நிறையாது........

5 AM GOOD MORNING
முதல்
10 PM GOOD NIGHT
வரை
எஸ்.எம்.எஸ் அனுப்பியே
எகிறுது பில்லு
அப்பப்போ
அரைமணி நேர
அரட்டை லொல்லு........
(பில்லு யாரு கட்டுவா??)

என்னேன்ன செய்கிறாயோ??

கதவுக்கு வச்ச பெயிண்(ட்)ட
வீட்டுக்காரன்
முதுகுக்கு அடித்தாயோ?
இதை
வெளியே சொல்ல
வெட்கப் பட்டு
மனசுக்குள்ளேயே மறைத்தாயோ???
(யாருக்கு தெரியும்?)

இந்த
கூத்தையேல்லாம்
கூடயிருந்து பார்க்க
குடுத்து வைக்கல............

பா(ர்)த்து மாமா பா(ர்)த்து
சுண்ணாம்பு தண்ணிய
சூப்புன்னு குடிச்சுடாதே............

பெயிண்ட் - யை
fair&lovely - ன்னு
நினச்சுடாதே............
பட்டியை எடுத்து
பல் விளக்கிடாதே.............

Thinner ஒன்றும்
தேனீர் அல்ல............
எமரிசீட் ஒன்றும்
கர்சீப் அல்ல............

பொத்தனூருக்கும்
திருப்பூருக்கும்
50 km இருக்குமா?
இப்ப கேட்டால்
5 inch என்பாய்!!!! (எல்லாம் நேரக் கொடுமை)



ஆணியில் தொங்கும்
காலாண்டராய் மனசு
அங்கிட்டும் இங்கிட்டுமா
ஆஆஆஆஆ..............டும்
எவனாச்சும் வந்து
ஏட்ட கிழிங்கடா - ன்னு
எகிறி எகிறி குதிக்கும்

நாள் ஆக.. ஆக..
பத்தாம் வகுப்பு
பரிச்சைக்கு போகும்
பையன் போல
மனசு துடிக்கும்............

கல்யாண நாளில்
கேள்விதாளை பார்த்தவன்
போல இருப்பாய்..........(பார்க்க சூப்பர இருக்கும்)



எப்படியோ
எழுதி முடிச்சாலும்...............
பத்தாவது பரிச்சைக்கு
ரிசல்ட்டு உண்டு
உன் பரிச்சைக்கு
ம்ம்கும்..................


(வடிவேலு ஸ்டைலில்
“மாட்டிகிட்டாய்யா......
மாட்டிக்கிட்டாய்யா..........”)




16 comments:

  1. ஆகா, அசாத்தலா இருக்குங்கோ....... :)

    ReplyDelete
  2. பா(ர்)த்து மாமா பா(ர்)த்து
    சுண்ணாம்பு தண்ணிய
    சூப்புன்னு குடிச்சுடாதே............

    பெயிண்ட் - யை
    fair&lovely - ன்னு
    நினச்சுடாதே............
    பட்டியை எடுத்து
    பல் விளக்கிடாதே.............

    Thinner ஒன்றும்
    தேனீர் அல்ல............
    எமரிசீட் ஒன்றும்
    கர்சீப் அல்ல............



    :))))))))))))))))) Sema comedy

    ReplyDelete
  3. பிரேம்குமார் மற்றும் ஸ்ரீ இருவருக்கும் என் நன்றி

    ReplyDelete
  4. Hai Prabhu!Your poem is very nice.Super.

    ReplyDelete
  5. மகா அவர்களுக்கு என் நன்றி

    ReplyDelete
  6. உங்க அத்தை மகனை இப்படி போட்டு வறுத்து எடுத்துட்டீங்க..பாவம்ய்யா அவரு!

    ஆனா, கவிதை/கலாய்த்தல், சூப்பராங்க! சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க...

    //நாள் ஆக.. ஆக..
    பத்தாம் வகுப்பு
    பரிச்சைக்கு போகும்
    பையன் போல
    மனசு துடிக்கும்............

    கல்யாண நாளில்
    கேள்விதாளை பார்த்தவன்
    போல இருப்பாய்..........
    (பார்க்க சூப்பர இருக்கும்)//

    ஹாஹாஹா...எப்படி பிரபு, இப்படியலாம் யோசிச்சு எழுதுறீங்க..கலக்கிட்டீங்க போங்க...

    ReplyDelete
  7. ///////////////
    உங்க அத்தை மகனை இப்படி போட்டு வறுத்து எடுத்துட்டீங்க..பாவம்ய்யா அவரு!///////
    இதெல்லாம் சும்மா.......
    நேரிலே இதவிட ஜோரா இருக்கு

    ..உங்கள் வருகைக்கு நன்றி
    கிட்டதட்ட எல்லா பதிவுகளையு படித்து பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்
    புதியவனுக்க்கு வாழ்த்துகூறியமைக்கு நன்றி

    ReplyDelete
  8. சூப்பருங்க...இத்தனை நாட்கள் இந்த தளம் என் கண்களில் படவில்லையே...

    //இந்த
    கூத்தையேல்லாம்
    கூடயிருந்து பார்க்க
    குடுத்து வைக்கல............
    //

    பார்த்தா வேடிக்கையா இருக்குமில...ம் ம்...

    எழுத்துப் பணியைத் தொடர்க...சிறப்பு!

    ReplyDelete
  9. நன்றி மலர்விழி
    தங்கள் வலைப்பூ முகவரி என்ன?

    ReplyDelete
  10. அருமை,

    அப்புரம் உங்க மச்சானோட ரிப்ளை எப்படி இருந்தது?

    ReplyDelete
  11. ////
    அருமை,
    ////

    நன்றி


    ///
    அப்புரம் உங்க மச்சானோட ரிப்ளை எப்படி இருந்தது?
    ///

    அதையேல்லாம் இங்கே சொல்ல முடியாது

    ReplyDelete
  12. பாத்தாலும் பாத்தேன் உங்களை மாதிரி ஒரு நக்கல் பேர்வழியை பாத்ததுயில்லை.
    பாவம் உங்க மாமா.
    ரெம்ப சிரித்து ரசித்தேன். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. //
    பாத்தாலும் பாத்தேன் உங்களை மாதிரி ஒரு நக்கல் பேர்வழியை பாத்ததுயில்லை.
    //

    இது பாதிதான்..........
    மீதி நேர்ல மட்டும்
    அதை வெளியே சொல்வதுஇல்லை


    ///
    பாவம் உங்க மாமா.
    ரெம்ப சிரித்து ரசித்தேன்.
    //
    பாவம் இல்லை
    உங்கள மாதிரி அவரும் சிரித்து ரசித்தார்



    //
    எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ.
    //

    தா...னா வருது........(ரொம்ப அடக்கம்)

    ReplyDelete
  14. கும்மி, கலக்கல் எல்லாமய் நன்றாக இருந்தது. அருமை.

    ReplyDelete
  15. //
    புதுகைத் தென்றல் கூறியது...
    கும்மி, கலக்கல் எல்லாமய் நன்றாக இருந்தது. அருமை.
    ///

    நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...