Tuesday, September 23, 2008

பார்த்த முதல் நாளே--சினிமா மெட்டுக்கு என் பாட்டு - 2


"வேட்டையாடு விளையாடு " படத்தில் இருந்து "பார்த்த முதல் நாளே" பாடல் மெட்டுக்கு என் வரிகள்


பல்லவி :
காதல் வந்ததாலே..
என் நெஞ்சில்
காதல் வந்ததாலே..

யாவும் இனிக்கிறதே..
இவ்வுலகில்
வாழப் பிடிக்கிறதே..

உனைப்போல் ஒருத்தி கிடைத்தவுடன்
இந்த உலகம்தானே பிடித்த இடம்
சொர்க்கங்கள் வேண்டாம்
நீ மட்டும் போதும்
(காதல் வந்ததாலே........)

சரணம் 1 :


மயிலிறகு கூந்தல்
வருடிக் கொண்டேதான் - உன்
மார்பில் முகம்சாய்க்க வேண்டும்

வாழும் காலமெல்லாம்
உன் கண்ணின் இமைக்குள்
நான் கைதியாகிவிட வேண்டும்

எனை கொத்திக் கொல்லும்
கழுகென்று - உந்தன் விழிரெண்டை
நானும் அன்று கண்டேன்

எனை கொன்றுத் தின்ன
என்னுயிரை உனக்கே உயிலெழுதி
நானும் மின்று தந்தேன்

உன்னோடு ஒர்நாள்
வாழ்ந்தாலும் போதும் - என்
வாழ்வு வளமாகும் பெண்ணெ......
நீயின்றி வாழ்ந்தாலே
ஜென்மங்கள் யாவும்
சாபமாகிப்போகுமடி கண்ணே..
(காதல் வந்ததாலே..)




சரணம் 2 :
 
பெண்;
கடற்கரை மணலில்
உன்பாதச் சுவடில்
கால்பதித்து நடந்திட ஆச(சை)

காற்றில் கலந்துவிட்ட
உன் சுவாசக் காற்றை
கண்டேடுத்து சுவாசிக்க ஆச(சை)



ஆண் ;

உன்கண்கள் இரண்டும்
என்கண்கள் இரண்டும்
ஓர்கானவு கானும்வரம் வேண்டும்

கானும் கனவிலும்
கண்மனியே உனைநான்
பிரியாமல் வாழ்ந்திட வேண்டும்

கடவுள்கள் கூடி
உனைகேட்டால் கூட
நான் திருப்பித்தரமாட்டேன் பெண்ணே..
எமனே என் எதிரே
வந்தாலும் கூட
போரிட்டு உனைகாப்பேன் கண்ணே
..
(காதல் வந்ததாலே..)


16 comments:

  1. வித்தியாசமான தாக்கம் உங்கள் வரிகளில்.

    ReplyDelete
  2. நன்றி தமிழ்நெஞ்சன்

    ReplyDelete
  3. ஆஹா, சிறந்த கற்பனை. பாடல் வரிகளை படித்தாலே காதுகளுக்கும மனதிற்கும் மெருகு சேர்கின்றன அதுபோலவே பாடி காண்பித்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்று எதிர் பார்கிறேன். இது போன்று இன்னும் அதிகமான கற்பனைகளை வெளி கொணர எனது ஆவல் என்றும் நிலைக்கும். நன்றி.வணக்கம்.

    ReplyDelete
  4. தங்களின் வருகைக்கும் கரூத்துக்கும் நன்றி தாய்மொழி

    ReplyDelete
  5. என்ன சொல்ல ஏது சொல்ல...கலக்குறீங்க நண்பா...

    //காற்றில் கலந்துவிட்ட
    உன் சுவாசக் காற்றை
    கண்டேடுத்து சுவாசிக்க ஆச(சை)//

    ரொம்பெ பெரிய ஆசைய்யா உமக்கு! கண்டெடுத்து சுவாசித்து விட்டா சொல்லி அனுப்புங்க...நானும் முயற்சி செய்து பார்க்கணும்ல...

    நல்லா இருக்கு...மேலும் தொடர என் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  6. //உன்கண்கள் இரண்டும்
    என்கண்கள் இரண்டும்
    ஓர்கானவு கானும்வரம் வேண்டும்

    கானும் கனவிலும்
    கண்மனியே உனைநான்
    பிரியாமல் வாழ்ந்திட வேண்டும்

    கடவுள்கள் கூடி
    உனைகேட்டால் கூட
    நான் திருப்பித்தரமாட்டேன் பெண்ணே..
    எமனே என் எதிரே
    வந்தாலும் கூட
    போரிட்டு உனைகாப்பேன் கண்ணே..//

    ம்...ரொம்ப நல்லா இருக்கு...இரசிக்க வைத்து என்னை உறைய செய்தது!
    பெண்ணுக்கு காதல் உன்னதமாகி அற்தப்படுகிறது,
    ஆண் பாதுகாப்பையும் அன்பையும் ஒருங்கே தரும் போது!

    ReplyDelete
  7. ரொம்பெ பெரிய ஆசைய்யா உமக்கு! கண்டெடுத்து சுவாசித்து விட்டா சொல்லி அனுப்புங்க...நானும் முயற்சி செய்து பார்க்கணும்ல...
    ///////////////////////

    இதுவேரயா???????????????

    ReplyDelete
  8. பெண்ணுக்கு காதல் உன்னதமாகி அற்தப்படுகிறது,
    ஆண் பாதுகாப்பையும் அன்பையும் ஒருங்கே தரும் போது
    ///////////////////

    அடடா..........!!!!!!
    அப்படீங்களா???????

    ReplyDelete
  9. தங்களின் வலைப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. உங்களின் பனி மேலும் வலம் பெற எங்களின் ஆதரவு என்றும் நிலைக்கும். தங்களின் ஒவ்வொரு இடுகைகளும் வித்யாசமாக அமைந்துள்ளது. நன்றி.

    ReplyDelete
  10. நன்றி தாய்மொழி
    மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  11. அருமை:))

    டெம்ப்ளேட் நல்லா இருக்கு பிரபு:))

    ReplyDelete
  12. ///
    அருமை:))

    டெம்ப்ளேட் நல்லா இருக்கு பிரபு:))
    /////////

    நன்றி திவ்யா

    ReplyDelete
  13. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  14. நான் ஒரு இளம் இசையமைப்பாளர் என்றவகையில் தங்கள் பாடல் வரிகளை திருட அனுமதி உள்ளதா?

    BECAUSE சூப்பரா இருக்கு....

    ReplyDelete
  15. Rajkumar said...
    நான் ஒரு இளம் இசையமைப்பாளர் என்றவகையில் தங்கள் பாடல் வரிகளை திருட அனுமதி உள்ளதா?

    BECAUSE சூப்பரா இருக்கு....


    ///
    கண்டிப்பா

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...