Wednesday, November 26, 2008

கதைசொல்லப்போறேன்


அமைதியான இரவு
ஆழ்ந்த உறக்கம் கலைந்தப்பின்
உறங்க மனமின்றி
மொட்டைமாடிக்குச் சென்றேன்
வறுமையில் வாடியவன்
வயிறு போல – வானம்
வெறுமையாய் இருந்தது


கடையடைப்பு செய்யப்பட்ட
கடைவீதி போல – வானம்
கலகலப்பின்றி இருந்தது




தெருமுனையில் ஏதோ
சப்தம் கேட்க
தேடிப்போனேன்


என்ன ஆச்சர்யம்!!!
வானில் காணாததை
வழியில் கண்டேன்!


நிலவதன் தலைமையில்
நட்சத்திரங்கள் பேரணியாய்
வந்தன......
எங்கே செல்கின்றன???


தொலைந்த நட்சத்திரங்களை
மீட்ககோரி - மனுகொடுக்க
மாவட்ட அலுவலகம் செல்கிறதோ??


ஓசோன்படல ஓட்டையை
அடைக்கக்கோரி - மனுகொடுக்க
தலைமைச் செயலகம் செல்கிறதோ??


எங்குதான் செல்கின்றன??
பின்தொடர்ந்தேன்
ஒரு வீட்டினருகில்
பேரணி நிறுத்தப்பட்டது!
கதவு தட்டப்பட்டது!!


நீ வந்து கதவு திறந்தாய்!!!


நிலவும் நட்சத்திரங்களும்
ஒருசேர பாடின
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

..................................................................

7 comments:

  1. அழகான கவிதை. அற்புதமான கற்பனை.
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி குந்தவி
    இது என் உறவினர் ஒருவரின் பிறந்த நாளுக்காக எழுதியது..
    நான் பிறந்தது நவம்பர்30

    ReplyDelete
  3. sirappu prabu....sorry for not in tamil...miss ur poems a lot...happy belated birthday...take care dear :)

    ReplyDelete
  4. நன்றி மலர்

    தமிழோ ஆங்கிலமோ தங்களின் வருகையே மகிழ்ச்சி

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு
    பிறந்த நாள்
    வாழ்த்துகள் சொன்ன
    விதம்

    ReplyDelete
  6. நன்றி மாதங்கி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...