Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பூமி எங்கும் புன்னகை பூக்கள் மலரட்டும்

எல்லோருக்கும் 
என்  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


என்றும் பிரியமுடன் 
பிரபு...

Thursday, December 02, 2010

அவமானம், 7 டிசம்பர் 1992 -தஸ்லீமா நஸ்ரின் ,மதம்,கத்தி,

கத்தி 

இது அழகான கத்தி
பளபளக்கும் கத்தி
மிகக் கூரான கத்தி

புத்தி மழுங்கியவன்
கையில் கிடைத்த
புராதான கத்தி

தொண்டைகிழிய கத்தி கத்தி -தன்
தொப்பைவயிற்றை குத்தி கிழித்தான்

பெருகியோடும் குருதிகண்டு
பேர் உவகை கொண்டுச் சிரித்தான்

குடல்கள்  எல்லாம்
வெளியே தொங்க - மது
குடித்தக் குரங்காய் 
குதித்து முடித்தான்..

இவனை நிறுத்திச்
சொன்னால் கேட்பானா ??!?

கிழிந்தது இவன் வயிறுதான் என்று
இவனை நிறுத்திச்
சொன்னால் கேட்பானா ??!?

மாட்டான்.. கேட்கவே மாட்டான்...
போ.. போ.. நாசமாய் போ...........

**********

நேற்று அலுவலகம் முடிந்து வருகையில் தொடருந்தில் "தஸ்லீமா நஸ்ரின்" எழுதிய "இது என் நகரம் இல்லை" (தமிழில் யமுனா ராஜேந்திரன்) படித்தேன் அதில் ஒரு கவிதை

அவமானம் 7 டிசம்பர் 1992

சதிபதா தாஸ் அன்று காலை
எனது வீட்டுக்குத் தேநீருக்கு வருவதாகத் திட்டம்
மனம் நிறைந்தபடி
அரைட்டை அடித்துக் கொண்டிருப்பதும்
செஸ் விளையாடுவதும் யோசனை
சதிபதா தாஸ் தினமும் வருவது வழக்கம்

இன்நு அவன் வரவில்லை

குல்லாக்கள் அணிந்த ஒரு கூட்டம்
சதிபதா தாஸின் வீட்டுக்குள் புகுந்து
பலவந்தமாக அவனைத்
தாக்கியது என்று செய்தி வந்தது

போனவர்கள் மண்ணெண்ணையை
அறையின் எல்லா இடங்களிலும் தெளித்தார்கள்
மேசைகள் நாற்காலிகள் படுக்கைகள் அலமாரிகள்
சட்டி பானைகள்
தட்டுமுட்டுச் சாமான்கள்
துணிமணிகள் புத்தகங்கள்
என எல்லாவற்றின் மீதும் தெளித்தார்கள்

அப்புறம் எல்லாத் தீக்குச்சிகளையும்
ஒருசேரக் கொழுத்தி
மண்ணெண்ணை தெளித்த எல்லா இடங்களுக்கும்
சுண்டி விட்டார்கள்

தீ பற்றியெறிந்தபோது சதிபதா தாஸ்
வீட்டு முன்றிலில் வெறித்தபடி நின்று
தாதி பஸார் மீது களங்கமற்ற தாதிபஸார்
வானதத்தின் மீது படியும்
கறும்புகையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.


மாலையில் நான்
சதிபதா தாஸின் வீட்டுக்குப் போனேன்

சதிபதா தாஸ் தனது முதாதையரின்
சாம்பலின் மீதும்
கரிந்த கட்டடைகளின் மீதும்
தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்
இரத்தம்
அவனது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது
மார்பிலும் முதுகிலும்
கறுத்த தழும்புகள் தெரிந்தன

அவமானத்தில் எனக்குக் கூசியதால்
என்னால்
அவனைத் தொடமுடியவில்லை


*1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி பாபர் மசூதி இந்தியாவில் இடிக்கப்பட்டது. இந்துகக்கள் வெறியாட்டம் ஆடினார்கள். ஏழாம் தேதி பங்களாதேஷில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த கவிதை இது.

**தாதிபஸார் டாக்காவில் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக் குடியிருப்புகளும் நாசமாயின.

**********
இதை படித்தவுடன் எழுதியதே முதலில் உள்ளவை
("கத்தி-மதம்" ,  "தொப்பைவயிறு-சமுகம்"  யாருக்கும் புரியமல் போய்விடகூடாது)

நன்றி
பிரியமுடன் பிரபு...

.

Tuesday, November 30, 2010

இறைவன் - கலீல் ஜிப்ரான்

கலீல் ஜிப்ரான்

*
A woman may veil her face with a smile.
பெண் , புன்னகை என்னும் முகமூடியால் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள் (ஆத்தீ இத நான் சொல்லல..)

**
Trees are poems that the earth writes upon the sky. We fell them down
and turn them into paper that we may record our emptiness.
பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள் , ஆனால் அவற்றை
நாம் வெட்டிச் சாய்த்து காகிதமாக்கி , நம் வெறுமையை அதில் எழுதித் தீர்க்கிறோம்

***
Only once have I been made mute. It was when a man asked me, \\\"Who are you?\\\"
ஒரே ஒரு முறை நான் ஊமையாக நின்றேன் \\\" நீ யார் ? என்று ஒருவன் என்னைக்
கேட்ட போது ..

****
என் ஆழ்மனத்திலிருந்து

என் ஆழ்மனத்திலிருந்து
ஒரு பறவை எழுந்து
வானோக்கிப் பறந்தது.

உயர உயரப் பறக்கப் பறக்க
அது மேலும் மேலும் வளர்ந்த்து
முதலில் அது
ஒரு குருவியாக.. பின்
ஒரு வானம்பாடியாக..பின்
ஒரு ககழுகாக..பின்
ஒரு பெரும் பனி மேகமாக...
மாறி மாறி பின்
விண்மீன்கள் மின்னும்
சொர்க்கத்தை நிரப்பியது.

என் மனத்திருந்து
ஒரு பறவை
வானோக்கிப் பறந்தது
அது பறக்க.. பறக்க..
வலிமையிலும் உருவத்திலும்
மேலும் வளர்ந்தது
இன்னும் என் மனதை விட்டு
விலகவில்லை.

என் நம்பிக்கையே!
என் பழக்கப்படுத்தா அறிவே!
உன் உயரத்திற்கு நான்
எவ்வாறு பறப்பேன்?

வானில் தீட்டப்பட்டுள்ள
மனிதனின் பெரும் சுயத்தை
உன்னுடன் எவ்வாறு பார்ப்பேன்?
என்னுள் இந்தக் கடலை
ஒரு பனியாக
எவ்வாறு மாற்றுவேன்.?

அளக்க முடியா வண்ணம்
ஆகாய வெளியில் உன்னுடன்
எவ்வாறு நகர்வேன்?

ஆலயத்தினுள்ளேயே
இருக்கும் ஒரு சிறைக்கைதி
அதன் தங்க முகடுகளை
எவ்வாறு உற்று நோக்க முடியும்?

ஒரு கனியின்
இதயத்தை நீட்டி
அந்தக் கனியினையே மூட
எவ்வாறு முடியும்?

என் நம்பிக்கையே!
வெள்ளிக்கம்பிகள்
வலுவான மரத்தடுப்புகள் பின்
சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருக்கும் நான்
உன்னுடன் பறக்க முடியாது.

ஆனாலும் என்
இதயத்திலிருந்து நீ
வானோக்கிப் பறக்கிறாய்.
என் இதயம் உன்னைப்
பிடித்து வைத்திருக்கிறது.
நான் மனநிறைவுடன் இருப்பேன்!!

*****
இறைவன்

முன்னொரு காலத்தில்
பேச்சின் முதல் தீண்டலை
என் உதடுகள் தரிசித்த போது
நான்
புனித மலையின் மேலேறி நின்று
இறைவனிடம் சொன்னேன்..
"எசமானனே.. நான் உன் அடிமை..
உன் மறைந்த நினைப்பே எனக்கு ஆணை..
உன்னை நான் எப்போதும் பணிந்திருப்பேன்..!!"
இறைவன் மறுமொழி ஏதும் கூறாமல்
ஒரு பெரும் புயலைப் போல்
என்னைக் கடந்து சென்றார்..

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர்
நான்
மீண்டும் புனித மலையில் ஏறி
மீண்டும் இறைவனிடம் சொன்னேன்..
"படைத்தவனே.. நான் உன் படைப்பு..
களிமண் கொண்டு நீ என்னை உருவாக்கினாய்..
நான் உனக்கே உரிமையானவன்..!!"
இறைவன் மறுமொழி கூறாமல்
ஆயிரம் சிறகுகள் போல்
கடந்து மறைந்தார்..

இன்னொரு ஆயிரம் ண்டுகள் கடந்ததும்
புனித மலையில் ஏறி
நான் மீண்டும்
இறைவனிடம் சொன்னேன்..
"தந்தையே.. நான் உங்கள் மகன்..
கருணையினாலும் அன்பினாலும்
நீங்கள் எனக்குப் பிறப்பளித்தீர்கள்..
பக்தியினாலும் வழிபாட்டினாலும்
நான் உங்களை அடைவேன்..!!"
இறைவன் மறுமொழி கூறாமல்
மலைச்சாரல் பனிமூட்டம் போல்
விலகி மறைந்தார்..

மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும்
மீண்டும் புனித மலையில் ஏறி
நான் இறைவனிடம் சொன்னேன்..
"இறைவா..
நீயே என் நோக்கம்..
நீயே என் நிறைவு..
நான் உன்னுடைய நேற்று..
நீ என்னுடைய நாளை..
நான் பூவுலகில் உன்னுடைய வேர்..
நீ வானுலகில் என்னுடைய மலர்..
சூரியனின் முகத்தின் முன்னால்
நாம் இருவரும் இணைந்து வளர்வோம்..!!"

இறைவன் என்னை நோக்கிக் குனிந்து
என் காதுகளில் இனிய சொற்களைக் கூறி
தன்னை நோக்கி வரும் நதியை
கடல் ஆரத் தழுவிக் கொள்வது போல்
என்னை அரவணைத்து எடுத்துக் கொண்டார்..

மலையிலிருந்து
நான் கீழே இறங்கி வந்த போது
இறைவன் எங்கும் நீக்கமற
நிறைந்திருந்தார்..

******
கண்

கண் ஒரு நாள் சொன்னது..
"பாலைவனத்திற்கு அப்பால்
ஒரு பனி மூடிய மலை
தெரிகிறது பாருங்கள்..
எவ்வளவு அழகாக இருக்கிறது..?"

காது கொஞ்ச நேரம்
உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப்
பிறகு சொன்னது..
"மலையா?? எந்த மலை??
எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!"

கையும் பேசியது..
"என்னால்
எவ்வளவு முயன்றும்
அந்த மலையைத் தொட முடியவில்லையே..
மலை நிச்சயம் இருக்கிறதா..??"

மூக்கு உறுதியாகச் சொன்னது..
"மலை எதுவும் கிடையாது..
எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!"

கண் வேறு பக்கமாய்த்
திரும்பிக் கொண்டது..

மற்ற உறுப்புக்களெல்லாம்
தங்களுக்குள் பேசிக் கொண்டன..
இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன..
"கண்ணில் ஏதோ
கோளாறு ஏற்பட்டு விட்டது..!!"

*******************

( மொழிபெயர்ப்பு யாருன்னு தெரியல , சிலகாலம் முன்பு இணையத்தில் இருந்து சேமித்து வைத்தது )
என்றும்
பிரியமுடன் பிரபு ....
.

Monday, November 22, 2010

மணற்கேணி 2010 போட்டிகள் - முக்கிய அறிவிப்பு

அன்புடையீர்,

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 போட்டியைத் தொடர்ந்து மணற்கேணி 2010 அறிவித்திருந்தோம்,நிறைய கட்டுரைகள் வந்துகொண்டிருக்கிறது. அறிவிப்பின் படி போட்டிக்கான கட்டுரைகள் பெறும் இறுதி நாள் நவம்பர் 15 என்று அறிவிக்கபட்டு இருந்தது. நேற்றுவரை குறைந்தது பத்து  மின் அஞ்சல்கள் போட்டியின் இறுதித் தேதியை நீட்டிக்க வேண்டுகோள் வைத்து வந்தன. நீட்டிப்பதற்கு வேண்டுகோள் வைக்கப்பட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு மணற்கேணி குழுவினர் ஒன்று கூடி வரும் டிசம்பர் 31 வரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.


இதன் படி மணற்கேணி போட்டியில் மூன்று பிரிவுகளில் இடம் பெறும் கட்டுரைகள் அனுப்ப இறுதித் தேதி 31 / டிச / 2010.

எழுத்தார்வலர்களும், பதிவர்களும் இந்த நீட்டிப்பை நல்வாய்ப்பாக பெற்று போட்டியில் பங்குபெற வேண்டுகிறோம்

சுட்டி:

முதல் மூன்று பரிசுகளாக மூவருக்கு சென்னை - சிங்கப்பூர் ஒருவார சுற்றுலா,

போட்டி விவரம், தலைப்புகள், பரிசு விவரங்களுக்கு மணற்கேணி - 2010 இணைய தளம்


ஒரு வேண்டுகோள்

மணற்கேணி போட்டி பற்றிய தகவல்கள் பலருக்கும் சென்றடைவதையும் பலரும் போட்டியில் கலந்துகொள்வதும் இதன் மூலமான ஆழமான எழுத்துகள் இந்த தமிழ் குமுகாயத்திற்க்கு கிடைக்க வேண்டுமென்பதால் உங்களிடம் ஒரு நன்கொடையை கேட்கிறோம், அந்த நன்கொடை மணற்கேணி பற்றிய போட்டியை உங்களுக்கு அறிந்தவர்களிடம் தெரிவிக்கவும், குழும மின்னஞ்சல்கள், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், உங்கள் வலைப்பதிவுகள், இணையதளங்களில் அறிமுகப்படுத்தி உதவுங்கள்.
ஊடக அறிக்கை என்ற இந்த அறிக்கையை அச்செடுத்து(Print out) அருகில் உள்ள கல்லூரிகள், நூலகங்கள் மற்றும் இணையதள மையங்களுக்கு தந்து அதை அவர்களின் அறிவிப்பு பலகையில் இடச்சொல்லவும். ஊடக அறிக்கைக்கு இங்கே அழுத்துங்கள்

அன்புடன்
மணற்கேணி - 2010



.

Monday, November 01, 2010

சினிமா மெட்டுக்கு என் பாட்டு..


(ஒரு மீள் பதிவு) 
("காக்க காக்க" படத்தில் இருந்து "ஒன்றா இரண்டா ஆசைகள்" என்ற பாடலின் வரிகளூக்கு பதிலாக


குறிப்பு: சூர்யா,ஒரு மழை நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஜோதிகாவை பார்த்ததை(சரணம்1) திருமணம் முடிந்தபிறகு ஒருநாள் மழையில் நனைந்து வீட்டுக்கு வரும்போது நினைத்துப்பார்த்தல்(சரணம்2)

பல்லவி:

கனவா? நினைவா? என்றுதான்
எண்ணம் தோன்றுதே......
ஏனோ தெரியல..
அன்பே.. உன்னை கண்ட பின்
உலகம் மறந்ததே
எதுவும் புரியல.......

என்னருகில் ...............
நீயிருந்தால் ...................
நரகம்தான் சொர்க்கமாகுமே............

நீயின்றி ........
நான்வாழ்ந்தால் .........
சொர்க்கம்தான் நரகmமாகுமே..........
                                                               (கனவா...?)

சரணம் 1:

மேகங்கள் ஒன்று கூடியே
மழைப் பூவைத்தூவியே வாழ்த்திட
பனிக்கால பூக்களைப் போலவே
உன் தேக அங்கங்கள் நனைந்திட

மழை நீராய் நான் மாற
வரம் கேட்டு மனுபோட்டேன்
மழைத்துளியாய் நான்தங்க-உன்
மார்புக்கூட்டில் இடம்கேட்டேன்

மரக்கிளையில் தங்கிய ஒருதுளி - அது
தரையில் விழுந்து சிரிக்குதே
மழை நின்றதும்.....
நீயும் சென்றதும்....
தனிமை கொன்..றதும்....
                                                 (கனவா......)

சரணம் 2:

உன் ஈரக்கூந்தலை நீ துடைத்திட
என் மனமும் மழையினில் நனையுதே..
நீ ஓரப் பார்வைகள் பார்த்திட
ஒரு கோடி மின்னலும் மின்னுதே......

வசந்தத்தின் பூப்போல
வழியெங்கும் உன்வாசம் - நீ..
வாய் பேசா தருணாங்களில்
உன்வளையல்கள் அதுபேசும்

ஒருநாள் கண்ட வானவில்லை
மறுநாள் தேடி காத்திருந்தேன்
வழியில் வந்ததும்......
வணக்கம் சொன்னதும்.....
வயதை தின்றதும்......(கனவா?......)

************************************

மேலும் சில
**பார்த்த முதல் நாளே- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் - 2


***சுட்டும் விழிச்சுடரே- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்- 3

****கண்டேன் கண்டேன்- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்- 4


*********
பிரியமுடன் பிரபு ...

Saturday, October 23, 2010

கடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்



Poetry is not an opinion expressed. It is a song that rises from a bleeding wound or a smiling mouth.
கவிதை என்பது கருத்தல்ல , அது குருதி வழியும் காயத்திலிருந்தோ புன்னகை புரியும் உதடுகளிலிருந்தோ உதயமாகிறது . 
-கலில் ஜிப்ரான்

              கலில் ஜிப்ரானின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.தனிமையில அவற்றை வாய்விட்டு சத்தமாக படிப்பதில் ஒரு மகிழ்ச்சி. . சில கவிதைகள்

என் பழைய மொழி-


நான் பிறந்து
மூன்று நாட்கள் ஆகியிருந்தன..
நான் தொட்டிலில் இருந்தபடி
என் புதிய உலகத்தை
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்.. 

என் அம்மா,
செவிலித் தாயிடம் கேட்டாள்..
"எப்படி இருக்கிறான் என் மகன்..??"


அவள் சொன்னாள்..
"ரொம்ப நன்றாக இருக்கிறான்..
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்..
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான்
இதுவரை கண்டதேயில்லை.."


எனக்குக் கோபம் வந்தது..
நான் கத்தினேன்..
"அம்மா.. அது உண்மையில்லை..
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது..
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது..
அவள் மார்பகங்களின் வாசம் கூட
எனக்குப் பிடிக்கவேயில்லை..
நான் மகிழ்ச்சியாய் இல்லை..
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!"


ஆனால் என் அம்மாவுக்கோ,
என் செவிலித்தாய்க்கோ
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை..
ஏனென்றால் நான் பேசிய மொழி,
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது..
இந்தப் புதிய உலகத்தில்
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை..


இருபத்தியோரு நாட்கள் கடந்ததும்
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது..
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி
என் தாயிடம்,
"நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே..
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.."
என்றார்.. 

நான் ஆச்சர்யத்துடன் அவரிடம்,

"அப்படியென்றால்
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய்
துக்கப்பட வேண்டுமே..
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!" என்றேன்..
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை..


ஏழு மாதங்கள் ஆன பிறகு,
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து
என்னைப் பார்த்து என் தாயிடம்,

"உங்கள் மகன்
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்..
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.." என்றான்..


நான் கோபத்துடன்,


"தலைவனெல்லாம் க முடியாது..
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்..
வேறு எதுவும் ஆக மாட்டேன்.." என்று கூக்குரலிட்டேன்..


ஆனால், அந்த வயதிலும்
என் மொழி யாருக்கும் புரியவில்லை..


இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள்
கழிந்த பிறகு
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி
எல்லோரும் இறந்து போய் விட்டனர்..


ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்..


ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்..
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது
அவன் சொன்னான்..
"நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று
எனக்கு அப்போதே தெரியும்..
நீ குழந்தையாய் இருந்த போதே
நான் கணித்துச் சொன்னேன்.."
என்றான்..


நான் அவன் சொன்னதை நம்பினேன்..
ஏனென்றால்,
இப்போது
என் பழைய மொழியை
நானே மறந்து போயிருந்தேன்..!!


(மொழிபெயர்ப்பு மீனாட்சி சங்கர்)
..............................


நரியின் பசி


நரி ஒன்று
காலை வேளையில்
தன் நிழலைக் கண்டது..

"இன்று நான்
ஒரு ஒட்டகத்தைத் தின்பேன்.."
என்று எண்ணிக் கொண்டது..

பகல் முழுவதும்
ஒட்டகத்தைத் தேடி அலைந்தது..
நண்பகலில்
தன் நிழலை மீண்டும் கண்டது..
"ஒரு எலி போதும் எனக்கு.."
என்ற முடிவுக்கு வந்தது..!!
..........


கடவுளும் சாத்தானும் 

ஒரு நாள்
மலையுச்சியில் சந்தித்தனர்.


கடவுள் சொன்னார்,
"சகோதரா,
உனது நாள்
நன்றானதாக அமையட்டும்..!"


சாத்தான்
மறுமொழி ஏதும் கூறவில்லை.

கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது,
நீ இன்று
மிகவும் கோபமாக இருக்கிறாய்
போலிருக்கிறதே..!"


சாத்தான் சொன்னது,
"எல்லாம்
இந்த முட்டாள் மனிதர்களால் தான்.
இப்போதெல்லாம் சில காலமாக
அவர்கள் என்னை நீயென்று
நினைத்துக் கொள்கிறார்கள்.
உன் பேர் சொல்லி என்னை அழைப்பது,
உன்னைப் போல் என்னை நடத்துவது,

சீச்சீ,

எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை..!"


கடவுள் புன்னகைத்துச் சொன்னார்,
"அதனாலென்ன சகோதரா,
சில நேரங்களில்
இந்த மனிதர்கள்என்னைக் கூடத்தான்
நீயென்று நினைத்துக் கொள்கிறார்கள்,
உன் பேர் சொல்லி என்னை அழைத்து
சபிக்கிறார்கள்,


அதனாலெல்லாம் நான் வருந்துவதில்லை..!"


சாத்தான் சமாதானமடையாமல்
மனிதர்களின் முட்டாள்தனத்தை
நொந்து கொண்டபடி நடந்து சென்றது. 



பிரியமுடன் பிரபு … 

.

Saturday, October 09, 2010

சிங்கப்பூர் - யை சுற்றி பார்க்கலாம் வாங்க ...(அரிய வாய்ப்பு)






















 

அப்படியே இந்த பாடல்களையும் பாருங்க


மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது குறைவு , இன்னும் நிறைய இருக்கு ,என்னடா வெறும் புகைப்படம் மட்டுமா?? என்று  நீங்கள் எண்ணலாம் , இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.

அட ஆமாங்க ...........

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அரிய வாய்ப்பை..........

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

Photobucket

....
நன்றி ஆ.ஞானசேகரன்

(மேலே உள்ள படங்களில் நல்லாயிருக்கும் படங்கள் எல்லாம் அவருடையதே ,,)
....



பிரியமுடன் பிரபு ...

.

Tuesday, September 21, 2010

சாதியும் சாமியும் ..





உச்சி முதல் பாதம் வரை
ஊரு மெச்சும் அலங்காரம்

தங்கத்தால மேனியெல்லாம்
தகதகனு மின்னுதய்யா
தள்ளி நின்னு பார்க்கையிலே
மனச ஏதோ பண்ணுதய்யா

வான ஒசரம் தேருகட்டி
வகையாய் அம்மனை அதுல வச்சு
வடம் பிடிச்சு இழுக்கையில
வந்ததையா வாய்ப்பேச்சு

வடக்கு வழி போனா ஒரு சாதி
கிழக்கு வழி போனா ஒரு சாதி
எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி

சாமிய மறந்து புட்டான்
சாக்கடையில சாச்சு புட்டான்
தேரேரி வந்த அம்மன்
தெருவோரம் கிடக்குதய்யா

காவல்காக்குற அம்மனுக்கு
காக்கி சட்டை
காவலுக்கு நிக்குதய்யா


 பிரியமுடன் பிரபு ...


Monday, September 13, 2010

சாகாவரம் -நூல் (மரணத்தை நோக்கிய பயணமே வாழ்வு)


நூல் : சாகாவரம்
ஆசிரியர்: வெ.இறையன்பு இ.அ.ப
பதிப்பு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

      வெ.இறையன்பு அவர்களின் கட்டுரைகள் சிலவற்றை நூல்கள் வாயிலாகவும் , ஒலிபுத்தகமாகவும் படித்து/கேட்டுள்ளேன் . பிறகு அவரின் “ஆத்தங்கரை ஓரம்” நாவலை அவரின் பெயருக்காகவே வாங்கி படித்தேன்.மிகவும் பிடித்து போனது அவரின் எழுத்து

       “நான் முழுநேரப் படைப்பாளியோ தீவிரப் படைப்பாளியோ அல்ல; மக்கள் மொழியைப் பேசும் சாமானிய வழிப்போக்கன் மட்டுமே.'' – என்று ஒரு நக்கிரன் பேட்டியில் கூறியுள்ளார் . அது மிக மிக சரி . ஒரு ஞானிபோலவோ அல்லது ஆசிரியர் போலவோ நம்மைவிட்டு தள்ளி இல்லாமல் மிக நெருக்கமாக ஒரு நண்பனை போல இருக்கும் அவரின் நடை(இப்பெல்லாம் புரியாம எழுதுனாத்தான் இலக்கியமுனு சொல்லுறாக)

சாகாவரம்
     இந்த நூல் விமர்சனம் கவிஞர் இரா.ரவி எழுதி ஒரு குழும மின்ன்ஞ்சல் மூலம் எனக்கு வந்த்து( http://tamilparks.nsguru.com/-f16/---t230.htm) .  மரணம் மீது எல்லோருக்கும் பயம் இருக்கும் , ஆனாலும் நம் வாழ்வு என்பதே மரணத்தை நோக்கிய பயணம் தானே.. ஆனால் அதை வென்று மரணமில்லா பெருவெளியை கண்டு சாகாவரம் பெற நினைக்கும் ஒருவனின் பயணமே இந்த நூல்.

     நாயகனின் பெயர் “நசிகேதன்” – (யாராவது இதன் பொருள் என்னானு தெரிந்தல் சொல்லுங்க .) . 3 மாதத்தில் 4 நண்பர்கள் கபீர், பார்த்திபன், கோபி ரூப் குமார் மரணம் அவருக்குள் மரணபயத்தை கொடுக்கிறது. மரணம் பற்றி அறிந்துகொள்ள கொல்லிமலை செல்கிறார் , அங்கே ஒரு ஞானியைடம் கிடைக்கும் ஓலைசுவடிகளை படித்து அதன் மூலம் மரணமில்லா பெருவெளியை தேடி பயணம் செய்கிறான் . பல இடங்களை , பல மனிதர்களை தாண்டி ஒரு நாள் அந்த மரணமில்லா பெருவெளியை அடைகிறான் . அவனுக்கு முன்பே பலர் அங்கு இருக்கிறார்கள் .

      “நம் வாழ்வு என்பதே மரணத்தை நோக்கிய பயணம்தான் , இயங்குவதுதான் வாழ்வு, தேங்குவது சாவு “ – இதைத்தான் சொல்கிறது இந்த நூல். பல தடைகளைத்தாண்டி அவன் கண்ட அந்த பெருவெளியில் மரணம் இல்லை , எங்கு மரணம் இல்லையோ அங்கு வாழ்வும் இல்லை . ஒவ்வொருவரியும் த்த்துவம் போல் எழுதுவது இவரின் சிறப்பு. கண்டிப்பா படிச்சி பாருங்க ஒரு புது அனுபவமாக இருக்கும்

நூலில் இருந்து சில வரிகள்

“பல நேரங்களில் நம் அறியாமையைக் கூட நம்முடையது என்பதால் நாம் பத்திரப்படுத்தி விடுகிறோம்”

“பழம் சாப்பிடுகையில் கொட்டை தட்டுப்படும் போது , நாம் கொட்டையை சபிக்கிறோம் . அந்த விதையால்தான் பழம் கிடைத்த்து என்பதை உணராமல்”

“சொர்க்கம் என்பது வசதிகளை பெருக்கிக்கொள்வதில் இல்லை , தேவைகளை குறுக்கிக்கொள்வதில் உள்ளது”

“மனம் நிறையும் போது மண் கூட உண்டால் செரித்துவிடுகிறது”
“உணவின் ருசி பசியை பொறுத்தே அமைகிறது”

“வரவேண்டிய நேரத்தில் வரவேண்டிய வடிவத்தில் வருகிறபோது மரணம் கூட திருவிழா போல”

“பழகியவர்களின் அன்பு சம்பளம் போல , பழகாதவர்களின் அன்பு புதையல் போல”

“ அழமுடியாத இடத்தில் சிரிக்கவும் முடியாது; அழமுடிஞ்சவனாலதான் மனம்விட்டு சிரிக்கவும் முடியும்”



பின் குறிப்பு : இது விமர்சனம் அல்ல பகிர்வு


*******
(15ம் தேதி பிறந்தநாள் காணும் மருத்துவர் தமிழ்த்துளி தேவன்மாயம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்  
(எத்தனை வயது என கேட்க கூடாது)
*******

பிரியமுடன் பிரபு…

.


Thursday, August 26, 2010

மாமனை கட்டிக்க சம்மதமா?!?




மத்தியானம் வேள
ஒரு மோரு சாதம் போல
ஏ(ன்) மனசிலிறங்கும் கண்ணம்மா..
இந்த மாமன(னை)  கட்டிக்க சம்மதமா ?!?.....(இந்த...)

காத்திலாடும் சேல - என்
மனசுக்கனுப்பும் ஓல
இது வேலையத்த வேல-ஆனா 
காதலுங்குது மூள..... (இது..)

சின்னதா நீ சிரிச்ச - அடி
சீக்கிரம் மனச பறிச்ச
இத காதலுன்னு சொல்லி
என்ன கானா பாட வச்ச..... (இத..)

சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
ஏறுதுந்தன் மவுசு
இந்த மாமா பாட்டு புதுசு
இன்னும் ஏன்டி இந்த ரவுசு


கால் கொலுசு பாட்டு பாடும்
காதில் கம்மல் ஆட்டம் ஆடும்
என் மனசு உன்ன தேடும்
நீ இல்லாங்காட்டி வாடும் .....
(நீ இல்லாங்காட்டி வா........டும்)




(சில ஆண்டுகளுக்கு முன் இரவு நேர பணியில் இருந்த போது உடன் வேலை செய்த நண்பர் ஒருவர் ஒரு கானா பாட்டுபோல பாட சொன்னார் , அப்போது அதற்காக முயற்சி செய்து ஒரு 20 நிமிடத்தில் இப்படி எழுதினேன் ,.... எப்படி இருக்கு???)


பிரியமுடன் பிரபு ...

Tuesday, August 17, 2010

மனப்பத்தாயம்-யுகபாரதி

நூல் : மனப்பத்தாயம் 
ஆசிரியர் : யுகபாரதி
பதிப்பு : நேர் நிரை
விலை : 45 ரூ



அதில் இருந்து சில கவிதைகள்




***ஆதலினால்


வருகை எப்போதென
வாசலருகே
விழியிரண்டையும்
நட்டு வைத்து

பரிதவிக்கும் நெஞ்சை
பகல் கனவில் மேயவிட்டு


வராவிடில் காரணம் துழாவி
முகம் சோர்ந்து
கவலை கொண்டு


அலுவலை மறந்து
அண்ணாந்தபடியே
ஞாபகம் பேசி


ஏதோவொரு பிரமையில்
தேகமிழைத்து


என்போல் நீயுமாகி
விடக்கூடதென்றுதான்
சொல்லாமல் வைத்திருக்கிறேன்
உன்னிடம் கூட என் காதலை


***
கடுதாசி


ஒரே வாளி நீரில் உடம்பு அலசி
டிரங்குப் பெட்டிக்கடியில்
மடித்து வைத்த சட்டை மாட்டி


கிடைக்கும் போது சோறுண்டு


பராரியாய் நகரத் தெருக்களில்
உலவிக்கொண்டிருந்தாலும்


ஊரிலிருந்து அம்மா போடும் 
கடுதாசிக்கு பதில்
சவுகரியமென்றுதான்
எழுத வேண்டியிருக்கிறது





***

மீதிய புத்தகத்துல படிங்க


பிரியமுடன் பிரபு

Friday, August 06, 2010

என் கவிதை பிறந்தது எப்படி ?!?!

எப்போதுமே நான் ஒரு காதலன்
எனக்கான காதலி வரும்வரை
என்ன செய்வதென் காதலை
என எண்ணியபோதுதான்
அது நிகழ்ந்தது ......................






பிரியமுடன் பிரபு......

Friday, July 23, 2010

நாளை பிறந்து இன்று வந்தவள் - மாதங்கி


நூல்: நாளை பிறந்து இன்று வந்தவள்,
45 கவிதைகள்,
ஆசிரியர் : மாதங்கி
பக்கம்- 79,
விலை ரூ.50/ -(10வெள்ளி)
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.


ஒரு பண்டிகை நாளில்


நான் குறிப்பிட்ட அனைவருக்கும்
என் வாழ்த்துகளைத்
தொலைபேசிகளும் , கணினிகளும்
தபால் நிலையங்களும்
சுமந்து சென்றன
இதுவரை நேரில் சந்தித்திராத
மின் நண்பர்களுக்கும்கூட.


எங்சியிருந்த ஒரு வாழ்த்து
அடுத்தவீட்டுக்காரனிடம் போகட்டா
என்று கேட் டபோது
அவன் முகம் நினைவுக்கு வரவேயில்லை
எவ்வளவு யோசித்தும் கூட




***

எனக்கே தெரியாதபோது


இதே சூழ்நிலையில்
நீ என்ன செய்திருப்பாய்?
என்னை கேட்கிறாய் நீ


என்ன 
செய்வேன்
என்பதை
அந்த
வினாடிதான்
முடிவு செய்யும்


அதுவரை
யூகித்துகொண்டே இருக்கலாம்
என் மேன்மையை பற்றி

***
*போனால் போகிறது



அண்ணி உங்க
தங்க அட்டிகையை
வரவழியிலே தொலைச்சிட்டேன்

கண்ணைக் கசக்கிய நாத்தியிடம்
போனால் போகிறது
நீ பத்திரமாக வந்தாயே என்றேன்.


புழைக்கடையில்
துணிதுவைக்கையில்
சமையலறையில்
மாமியாரின் குரல்
அவர் மகனிடம்


ஒரு ஆர்ப்பாட்டம் கூச்சல்
எதுவுமில்லை
பித்தளைக்கு மெருகு
போட்டு அவங்க வீட்டில்
கொடுத்துட்டாங்களோ


தலைமேல்
பறந்த குருவிகளை
அண்ணாந்து பார்த்தேன்
இன்னும் இருக்கிறது ஆகாயம். 

***

          இப்படி நிறைய கவிதைகள் உள்ளது இதில். பல கவிதைகள் படிக்கும் போதே ஒரு காட்சியாக நம் கண்முன்னே வருகிறது.அதிகம் சிங்கப்பூர் சூழலை வைத்தே கவிதை எழுதியுள்ளார் 

                மரபு,புது,நவின கவிதைகள் என்ற வகைகள் எல்லாம் எனக்கு தெரியாது. ஒரு கவிதை படிக்கும் போது புது அனுபவமாக இருக்கனும், புரியனும்(கொஞ்சம் சிரமம் இருக்கலாம்) , சொல்லும் விதம் படிப்பவனை கவர வேண்டும் அவ்வளவுதான் எனக்கு. இதில் அதிக கவிதைகள் தெளிவாக புரிகிறது அதனால்தான் படிப்பவனுக்கும் எழுதியவருக்கும் ஒரு நெருக்கம் வருது.அவர் எந்த தளத்தில் இருந்து சிந்தித்தாரோ அதே தளத்துக்கு நம்மையும் இட்டுச்செல்கிறது. . ஆனால் சிலரின் சில கவிதைகள் படிக்கும் போது எனக்கு புரிவதே இல்லை. பல விளக்கங்களுக்கு பின்னரே கொஞ்சம் புரியும் . படிப்பவனுக்கும் எழுதியவருக்கும் இவ்வளவு இடைவெளி தேவையா என தோன்றுவதுண்டு எனக்கு. 
               
 சிங்கப்பூர் நூலகம் 894.811 (சிங்கப்பூர் படைப்புகள் என்று தனியாக வைத்திருக்கிறார்கள்)


மேலும் இந்த நூல் பற்றி படிக்க

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60811132&format=print&edition_id=20081113


கவிஞர் மாதங்கியின் வலைபதிவு(சில கவிதைகள் அங்கே உள்ளது)

பெரிதினும் பெரிது கேள்

 

 என்றும் பிரியமுடன் பிரபு...


 

Saturday, July 10, 2010

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ



புகைப்படம் http://www.flickr.com/photos/mrkclicks/  நன்றி

                         
உழுதவன் கணக்குப் பார்த்தா
வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்ல
 
கொங்கைகள் குலுங்க
குதிச்சிட்டு போனா
குட்ட பாவாடகாரி

மனசு நெறஞ்ச மவராசன்
மனை எழுதி தாராக

கொசுக்கடியிலும்
கோவணத்தோடப்  படுதிருக்கேன்
கொள்ளிகட்டையா வேகுது வயிறு
எங்க உசிரெல்லாம் அவிகளுக்கு மசுரு


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=35509   இதுக்கு அதுக்கும் ம்நீங்க முடிச்சு போட்டு பார்த்த அதுக்கு நான் பொருப்பல்ல    பிரியமுடன் பிரபு .....

Sunday, June 27, 2010

காவல்காரனாய் நிலா !!




பொங்கலுக்கு முந்தைய இரவு
தெருவெல்லாம் கோலம் போட்டார்கள்
விடிய விடிய

நீயும் கோலம் போட வந்தாய்
ஊரே அதிசயமாய் பார்த்தார்கள்!!!!
தேரொன்று தெருவில் வந்து
குனிந்து நிமிர்ந்து
கோலம் போட்டால் அதிசயம்தானே!!!

பத்தடி அகலத்தெரு முழுவதும்
பரந்து விரிந்ததுன் கோலம்

புள்ளிகளெல்லாம் தேவதைகளாகிக்
கோடுகளை வளைத்து எடுத்து
இடுப்பில் மாட்டி ஆட்டம் போட்டன
வீட்டுச் சாளரத்தின் வழியே
பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நான்
வெகுநேரமாகியும்

"நல்ல வேளை யாரும் பார்கல"-என்று 
நான் எண்ணிய நேரம்
நிலா என்னை கவனிப்பதை உணர்ந்தேன்
சிரித்த படியே உறங்கச் சென்றேன்

யாரும் இல்லாத இரவில்
உன் கோலத்துக்குக் காவல் நிற்கிறது நிலா!!





என்றும்
பிரியமுடன் பிரபு..


.

Thursday, June 17, 2010

ஒண்டிக்கட்டை உலகம்-புத்தகம்(A COMPLETE GUIDE FOR BACHELORS)

புத்தகம் : ஒண்டிக்கட்டை உலகம்
ஆசிரியர் : சிபி கே. சாலமன்
பதிப்பு : கிழக்கு பதிப்பகம்
பக்கம்: 144
விலை: ரூ.70

             
           குடும்பம் என்கிற சிறிய வட்டத்துக்குள் இருந்து வெளியே வந்து வாழ்கிற போது வாழ்க்கை  புதிதாக மாறும். பொதுவாக படித்து முடிக்கும் வரை குடும்பத்தோடு இருந்துவிட்டு பின் வேலைக்காக பல இடங்களில் வாழவேண்டியுள்ளது.அப்படி குடும்பத்தைவிட்டு வந்து அறிமுகம் இல்லதவர்களோடு தங்கி வாழும் ஒண்டிக்கட்டை வாழ்வை பற்றிய புத்தகம்தான் இது.


          அதிகம் வெளி உலகம் அறியாமலேயே படிப்பை முடித்துவிடுகிறோம் (அல்லது முடித்துவிட்டேன்) .ஒரு பயிற்சிக்காக அறந்தாங்கியில் சில மாதம் பின்  வேலைக்காக பெங்களூருவில் ஒரு வருடம் அதன் பின் செங்கப்பூரில் 6 வருடம் என கிட்டதட்ட கடந்த 9 ஆண்டுகள் நானும் ஒரு ஒண்டிக்கட்டைதான். நினைத்து பார்த்தாலே வியப்பா இருக்கு. வேலையிட மாற்றம் காரணமாகவோ அல்லது வெறு சில காரணங்களுக்காகவோ  தங்கும் இடம் மாறிக்கொண்டே வருகிறது. பெரும்பாலும் இடம் மாறும் போது  அதற்க்கு முன் பழகியவர்களை விட்டு விட்டு புதிதான நபர்களுடன் பழகவேண்டி வரும் இப்படியாக 9 வருடத்தில் பல இடம் மாறி பல முகம் பார்த்தாச்சு.முதன்முதலில் அறந்தாங்கியில் தங்கியிருந்தபோது  அங்கு உடன் இருக்கும் நபர்களுடன் பழகுவதில்/பகிர்ந்துகொள்வதில் எனக்கு நிறைய சிக்கல்கள் ஆனால் காலம் செல்ல செல்ல அனுபவம் நிறைய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்திவிட்டது .. காலம் கடந்து என் கையில் இந்த புத்தகம் கிடைத்ததாக உணர்கிறேன்.
                                           
          ஒண்டிக்கட்டை வாழ்வு பிரச்சனைகள்,அறை நண்பர்களோடு பிரச்சனை இன்றி பழகுதல் உள்ளிட்ட பலவற்றை அலசி எழுதியுள்ளார்.இந்த புத்தகத்தில் உள்ளவற்றில் அதிகம் நான் நேரிலே பார்த்து/அனுபவித்து இருக்கிறேன்.பள்ளி/கல்லூரி படித்து முடித்து புதிதாக இந்த வாழ்வுக்குள் வருபவர்களுக்கு இந்த புத்தகம் A COMPLETE GUIDE FOR BACHELORS -என்று அவர்கள் அட்டையில் உள்ள வாசகம் போலவே உதவியா இருக்கும்                     
                    
          பிரச்சனை என்பது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் மாறுபடும் ஆனாலும் அதற்க்கு சில பொதுவான காரணிகள் இருக்கு , அவற்றை தனியாக வரிசைபடுத்தி அலசியுள்ளார் ஆசிரியர்.இது புத்தக விமர்சன பதிவு அல்ல.படித்தவுடனு என்னுள் தோன்றியவற்றை எழுதுயுள்ளேன்.புத்தகத்தின் அட்டைபடத்தை இணையத்தில் தேடிய போது கிடைத்த சில விமர்சனங்கள் கிழே


சிங்கப்பூரில் இருப்பவர்கள்

சிங்கப்பூர் நூலகம் சூ சொ காங்-306.8152-இல் எடுத்து படிக்கலாம்

புத்தகத்தில் இருந்து

          பேச்சிலர் ரூம் வாழ்க்கை என்பது ஒருவிதமான பயிற்ச்சி. வெவ்வேறு விதமான மனிதர்களோடு வாழ்வதற்குக் கிடைத்த களம். நம்முடைய ரசனைக்கு, குணத்துக்கு கொஞ்சம்கூட ஒத்துப்போகதவர்களோடு சேர்ந்து வாழ விதிக்கப்பட்ட வாழ்க்கை. இப்படி பட்ட சூழ்நிலையில் , அந்த நபர்களோடு சகித்துக் கொண்டோ  பொருத்துக்கொண்டோ வாழ்ந்துவிட்டோம் என்றால் நம் வாழ்வின் மிகபெரிய வெற்றிக்கான முக்கிய பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்று அர்த்தம்




(டெம்ப்ளேட் மாற்றியுள்ளேன் ,  நல்லாயிருக்கா? , மேலும் பக்கம் திறப்பதில் தாமதம் வருதா என சொல்லவும்)



என்றும் 
பிரியமுடன் பிரபு..



Sunday, May 16, 2010

காதலினால் ..............


பூவை கிள்ளிப் பறித்தேன்
அழாமல் சிரித்தது
பூ உன் கூந்தலுக்கு !!

    



என் கவிதைக்கான
பரிசு பணம் - முகவரி மாறி
சரியாக உன் வீட்டில்
      


என்னவளே நீ பவணி வரும்
எல்லாத் தெருவுமே
தேரடித் தெருதான் !
       

Saturday, April 17, 2010

தூரத்தில் நானும் நீயும்......


அழகிய ரோஜாவை
அனுப்ப ஆசைப்பட்டேன்
அது உன் முகத்தழகைக்
கண்டவுடன் வாடிவிடும்
ஆதலால் அனுப்பவில்லை
கவிதையை மட்டும்
ஏன் அனுப்பினாய்
என்று நீ கேட்பாய் !
உன் வாயால் ஒருமுறை
இதை வாசித்துக்காட்டு
இந்த கவிதைகள் மோட்சம்
பெற்றுவிட்டுப் போகட்டும்..





எனக்கும் ஆசைதான்
பூ அரும்புவதை போல நீ
புன்னகைப்பதை காண.....
மெல்லிய வீணையதிர்வாய் நீ
சிரிப்பதை பார்க்க......
என் கோபங்களையெல்லாம்
நீரிலிட்ட உப்பாய்
கறைக்குமுன் கண்களை காண
ஆனாலும் காத்திருக்கிறேன் !
தூரத்து சூரியனின் ஒளிகொண்டு
பூமி விடிவதைபோல
தூரத்தில் இருக்கும் உங்கள்
நினைவில் வாழ்கிறேன்





நீ அழுதால் நானும் அழுவேன்
நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்
சிரித்துகொண்டே இரு 
என்னை சிரிக்க வைப்பதற்காகவேணும்


என்றும் பிரியமுடன் பிரபு ...
.
.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...