Monday, February 14, 2011

என்னாங்கடா உங்க காதல்..-1 (18-)


முதலில் எனக்கு தெரிஞ்ச இரண்டு காதல்'களை' சொல்கிறேன்(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)


     நாமக்கல் பேருந்து நிலையத்தில் நுழைந்த போதுதான் அவன் என்னை அழைக்கும் குரல் கேட்டது . புத்தகக்கடைக்கு அருகில் பாஸ்கர் நின்றுகொண்டிருந்தான்.

"என்னடா இங்க.."-என்றேன்
"எனக்கு கலியாணம் ஆச்சுடா.." -என்றான் ,
பீ.சி.யே 3 வது வருடம் படிக்கிறவன் திடிர் என கலியாணம் ஆச்சுனு சொன்னதால நான் நம்பவில்லை,  "நிஜம்தாங்க" என்றாள் அவன் அருகில் நின்ற அந்த பெண். அவள் பெயர்  தீபா , அவனுடன் படிப்பவள் . நான் நம்புவதற்க்காக சுடிதாருக்குள் மறைந்து இருந்த தாலியை எடுத்து காட்டினாள்.

     சிலர் சிரிப்பார்கள், உதடுகளில் மட்டும் அது இருக்கும், ஆனால் தீபா தன் தாலியை என்னிடம் காட்டிய போது அவள் முகம் முழுக்க, உடல் முழுக்க அந்த சிரிப்பும் மகிழ்சியும் இருந்தது, அந்த நொடி அவள் பேருந்து நிலையத்தில் இல்லை,எங்கோ மிதந்து கொண்டிருக்கிறாள் என்பது போல இருந்தது அவள் முகம். நானும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு  இருவருக்கும் வாழ்த்துச் சொன்னேன். மனதுக்குள் அவளுக்காக வருத்தப்பட்டேன். தன் தலையில் தானே மண்னையள்ளிப் போட்டுக்கொண்டாளே.. என

     சரியான நேரம் பார்த்து இருவரும் பாஸ்கரனின் வீட்டுக்கு வந்தார்கள், சற்று முரடனான அவன் அப்பா போட்ட சண்டையில் தெருவே கூடிவிட்டது, அதே நேரம் விசயம் அறிந்த பெண்வீட்டாரும் ஒரு கும்பலாக அங்கே வந்தார்கள். ஊர் தலைவர் உள்ளிட்ட சிலர் தலையிட்டு சமாதானம் பேசினார்கள்,அந்த சபையில் பாஸ்கரன் அப்பா பெண்னை பார்த்து கேட்டார் "பென்சில் பேனா வாங்கவே என்கிட்டதான் காசு கேப்பான்,எதை நம்பி கலியாணம் செய்துகிட்டீங்க" ? ..,அப்பாவுக்கு பயந்தவன் பாஸ்கர் எனவெ அமைதியாகவே இருந்தான். இங்கதான் மக்களே கதையின் முக்கிய காட்சி..(நோட் பண்ணுங்க) அந்த பெண் பதில் சொல்கிறாள் "ஏன் வழியில்லையா? நாங்க படிச்சிருக்கோம் வேலைக்கு போவோம் இல்லாட்டி சுண்ணாம்பு அடிக்க போகலம், மேஸ்த்ரி வேலைக்கு போகலாம், வழியா இல்லை" என்று வசனம் பேசுச்சு (இடைவேளை)

     பிரச்சனை காவல் நிலையம் போச்சு,என்ன நடந்ததோ அவள் தன் பெற்றோர் உடன் செல்வதாகச் சொல்லிச் சென்றுவிட்டாள். இவனும் ஒருநாள் துக்கம் அனுசரித்துவிட்டு வழக்கம் போல கல்லூரி போனான். பெண் வீட்டார் நல்ல வசதி,பெண்னுக்கு திருமன ஏற்பாடு செய்ய முயற்சித்தார்கள், எற்கனவே விசயம் ஊர் முழுக்க தெரிந்ததாலும், பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் தான் பாஸ்கரனை விரும்புவதாக தீபா சொல்லிவருவதாலும் வேறு வழியின்றி மீண்டும் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது

     இப்படியாக தீபா தன் காதலில் வெற்றி கொடி நாட்டினாள்..  ம்ம்ம்ம் இருங்க, எங்க எழுந்து போகுறீக.. இது என்ன சினிமாவா காதல் ஜெயிச்சதும் சுபம் போட.. இது வாழ்க்கைங்க படமே இனிமேல்தான் ஆரம்பம்....

     எப்படியோ கல்லூரி முடித்தான், பின் வேலைக்கு சென்றான், ஆனால் எங்கும்  2 மாதம் கூட நீடிக்கவில்லை "ஆச இருக்கு அரசனாக,யோகம் இருக்குது ஆண்டியாக"-ங்கறது போல. பின் மாமனார் ஒரு கடை வைத்து கொடுத்தார், தண்ணி ,சீட்டாட்டம் என பழக்க பட்டவனுக்கு வியபாரம் சரிவரல,நட்டம் . தன் தந்தை இறப்புக்கு பின் கிடைத்த தன் பங்கு பணத்திலும் தொழில் செய்து நட்டம்,போதாகுறைக்கு சீட்டாடி குடித்துவிட்டு வந்து தீபாவுக்கு அடி உதை..தன் மகளுக்காக அவனின் மாமனார் கொடுக்கும் பணத்தில்தான் வாழ்க்கை ஓடுது.அவனுக்கு ராச வாழ்க்கைதான்.பாவம் தீபா, சமிபத்தில் என் நண்பன் ஒருவரை வழியில் சந்தித்த போது அவன் செய்த கொடுமைகளை சொல்லி அழுதுள்ளார்


2.
          வீட்டிலும்,மற்ற சொந்தத்தாலும் அதிகம் பாசம் கொட்டி வளர்க்கபட்டவன் சங்கர்.எல்லாம் பெண்கள் இவன் மட்டுமே ஆண்பிள்ளை என்பதால் பெரியவர்களும் மற்ற பெண்களும் அளவற்ற அன்பு காட்டினார்கள்.பிகாம் 3 வருடம் ஆரம்பித்ததில் இருந்தே அடிக்கடி வீட்டில் சண்டை, நான னவனுடன் நெருங்கி பழகுபவன் என்பதால் என்னிடம் புகார் வரும். நானும் இது எல்லாவீட்டிலும் வரும் தலைமுறை இடைவெளிதான் என எண்ணி சமாதானம் செய்தேன். ஒரு நாள் பேசும் போது தான் ஒரு பெண்னை காதலிப்பதாகவும்,கட்டினால் அவளைத்தான் கட்டுவேன் எனவும் சொன்னான்.அப்பதான் எனக்கு புரிந்தது இவன் பிரச்சனைகளின் காரணம் காதல் என்று.

     தம்பி.. காதல் என்பது பிறந்த குழந்தை போல, அவ்வளவு அழகானது,எல்லோருக்குமே ஆசைவரும்,அதுக்காக 6 மாதத்திலேயே வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தால் பார்க்க சகிக்காது.. கொடுரமா இருக்கும். காதல் தப்பில்ல,ஆனா 19 வயசுல வருவது காதல் அல்ல வெறும் இன்கவர்ச்சி. இந்த வயசுல உன்னையே உன்னால புரிந்துகொள்ள முடியாது பின் எப்படி ஒரு பெண்ணை புரிந்து காதல் செய்வது?. இந்த வயசுல வரும் காதல் ஒரு ஹச்.ஐ.வி கிருமி போல,அந்த கிருமி நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் தாக்கி அழிச்சிடும்,வேறு எதுவும் செய்யாது. அது போலத்தான் இந்தக்  காதலும் உன் சுய சிந்தனையை கொல்லும் பின் நீ தானாக அழிவாய்..."--- ம்ம்ம் இப்படியெல்லம் ஆரம்பித்து மணிகணக்கா பேசினேன்.ஆனா அவன் சொன்னான் பாருங்க ஒரு பதில் 'காதலிச்சாத்தான் அதன் அருமை தெரியும்"" ன்னானுங்க. இனி இவனிடம் பேசுவதும் குடிகாரனிடம் பேசுவதும் ஒன்னுதான்.

     உறவுகள் இவனுக்கு புத்திமதி சொன்னது. உறவெல்லாம் பகையாக தெரிந்தார்கள் .தன் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு வரும் என்பதே இவன் வீட்டில் உள்ளவர்கள் மீது கொண்ட கோபத்திற்கு காரணம், ஏன் லேட் என கேட்டால் சண்டை, பேசினாலே சண்டை,இப்படி சண்டைகள் அடிக்கடி நடந்ததால் இறுதி தேர்வில் கோட்டைவிட்டான், தன்னோடு படித்தவர்கள் மேற்படiப்பு படிக்க இவன் 1 வருடம் வெட்டியாக ஊர் சுற்றினான், பின் அரியர் முடித்து மேற்படிப்பு சேர்ந்தான். இப்போ படிச்சுகிட்டு இருக்கான்.. அவன் காதலி இப்போ வேறு ஒருவனின் மனைவி. கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என்று அப்போ சொன்னான் இனி கட்டனுமுனா ரெண்டாந்தாரமா போனாத்தான் ..

     வயசுக்கோளாறில் ஒரு பெண்ணின் மீது ஏற்பட்ட ஈர்ப்பை காதல் என எண்ணி குழப்பிகொண்டதால், தன் குடும்பதார் மற்றும் சொந்தங்கள் அவன்மேல் வைத்திருந்த காதலை இழந்துவிட்டான். இதுதான் இப்போ பிரச்சனையே காதல் எது இனக்கவர்ச்சி எது என பிரித்து பார்க்க தெரிவதில்லை

     கல்லுரியில் ஒரு நாளில் இரண்டு மணிநேரம் பேசி இருப்பாயா? , வருசம் ஒரு 175 நாள் பழகியிருப்பாயா?  , அதற்க்குள் எப்படி  வாழ்நாள் முழுவதும் அவனே/அவளே துணை என முடிவு செய்வது ? அதுவும் உன்னையே சரியாக புரிந்துகொள்ள முடியாத அந்த வயதில் ?

   ஒரு ஆண் பெண்ணிடமும் ஒரு பெண் ஆணிடமும் தன்னை முழுமையாக வெளிகாட்டி கொள்வதில்லை. அவர்களின் சுய உருவங்களை காண நாம் அவர்களுடன் நீண்டதூரம் பயணிக்க வேண்டிவரும்.
            சங்கரின் காதலியை பாராட்டலாம் . சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார் .நன்கு படித்து வேலையில் உள்ள மாப்பிள்ளையை காட்டினால் அவளின் மனம் மாறியிருக்கும் .படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் தன்னோடு காதல் கொண்டு படிப்பை கோட்டைவிட்ட சங்கரை விட அந்த மாப்பிள்ளை சரியானவனாக தெரிந்திருக்கலாம்.

     "ஒரு விசயத்தின் மேல் அதிகம் ஆசைவைக்கும் போது அது மதிப்புடையதா இல்லையா என்று பார்க்கமுடியாமல் போய்விடுகிறது, பசிக்கின்ற போது சாப்பிட்டுவிடுகின்ற கெட்ட பதார்த்தம் பொல பல இடங்களில் ஆகிவிடுகிறது காதல்" - பாலகுமாரன்(பொய்மான் நாவலில்)

    எதன் மீது எல்லம் புனித(ம்) பிம்பம் கட்டPபடுகிறதோ அவைகளில் எல்லாம்  அயோக்கியதனமும், ஏமாற்று வேலைகளும் அதிகம் நடக்கும். எ.க -கடவுள் ,மதம் ,
இவைகளின் மீது எல்லொருக்கும் ஒரு ஈர்ப்பு அதை சிலர் அவர்களின் சுயநலத்துக்காக paயன்படுத்துகிறார்கள். பாஸ்கரனும் அப்படித்தான் காதல் என்ற புழுவோடு அவன் போட்ட தூண்டிலில் மாட்டியது தீபா என்ற மீன் மட்டும்தான், வருத்து சாப்பிட்டு ஏப்பம் விட்டாச்சு.. தீபா இல்லட்டியும் அவன் வாழ்வு அப்படித்தான் இருந்து இருக்கும் ,காரணம் அதுதான் அவன் இயல்பு. ஆனால் தீபவுக்கு? அவளின் ஆசை,கனவு,காதல், அவன் மேல் கொண்டு இருந்த நம்பிக்கை எல்லம் அவன் அடிக்கும் அடியில் உடைந்து போச்சு. உடலளவில் மட்டும் அல்ல மனதளவிலும் அவள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம் .ஒருவேளை திருமணத்துக்கு முன்பே பாஸ்கர் பற்றி தீபாவிடம் சொல்லியிருந்தால் நம்பியிருப்பாளா ? கண்டிப்பாக மாட்டாள். பாஸ்கரின் அம்மா அப்பவே வந்து சொன்னாலும் நம்பமாட்டாள் . காதலக்கு கண் இல்லையாம்

     இதுவே தீபா மோசமான பெண்ணாக இருந்து ,பாஸ்கர் யோக்கியனாக இருந்திருந்தால் எப்போதே தீபாவை விட்டு பிரிந்து இருப்பான் .இவள் நான்  நினைத்தது  போல் இல்லை ,என்னை  எமாற்றி விட்டால்,  இவளால் நமக்கு இன்பம் இல்லை துன்பம் மட்டுமே என வரும் பொது ஒரு ஆண் ஒரு பெண்ணை விட்டு பிரிவது இங்கே எளிது , ஆனால் ஒரு பெண்ணுக்கு அப்படி அல்ல, அவளின் மீதான சமுதாய பார்வை வேறு .

     ஒரு சேலை எடுக்கவே பத்து கடை ஏறும் பெண்களே , வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் ஏன் இப்படி அவசரம்? ... ஒருவன் தன் பின்னால் சுற்றுவது அவர்களுக்கு ஒரு போதையை தரும் போல ,அதில் மயங்கி சிலர் வாழ்வை தொலைகிறார்கள்

     வங்கியில் பணம் போட்டால் கூட நல்ல வங்கி எது என பலமுறை சோதித்து போடுகிறோம் , வழக்கை துணை தேர்வில் எவ்வளவு கவனம் இருக்கணும் ?, தவறான வங்கியில் போடும் பணம் போல தவறான நபரின் மீது ( ஆண்/பெண் ) கொள்ளும் காதலும் பயனில்லாமல் போகும். பணம் போனால் சம்பரிச்சுகலாம் .வாழ்க்கை ?!?!?!? 

*****
          சேலத்துலேர்ந்து காலைல ஈரோடுக்கு வந்தேன். அப்போ சேலத்துல ஒரு மலைகிட்ட பஸ் மெல்ல போச்சு. எல்லோரும் எட்டி எட்டி பார்த்தாங்க, என்னானு கேட்டேன். அதோ பார் மலை உச்சில ஒரு மான் நிக்குதுனு சொன்னாங்க, எட்டிpபர்த்தேன்,கூர்மையாக பார்த்தேன், ஒரு பெண்மான் நின்னுகிட்டு இருந்துச்சு, ஆச்சரியமா இருந்துச்சு. ஆமாங்க மான் நிக்குது அசையுதுனு சொன்னேன்,. அது மான் இல்லை அது நிழல் ஒரு பாறையினுடைய நிழல். மலையேறி பார்த்தா அங்க ஒன்னும் இருக்காது பாறைதான் இருக்கும், கீழ இருந்து பார்த்தா மான் போல தெரியும் என்று சொன்னாங்க.ஆக அது மான் இல்ல பொய்மான், அதுபோல என் காதலும் பொய்மான், மான் இருகிறது போல இருக்கு கிட்ட போனா இல்லை அதேபோல காதல் இருக்குனு நினைச்சேன் கிட்டபோனா பின் இல்லைனு தெரிஞ்சுது, உண்மையிலேயே அது நிழல்தான் பொய்தான்.. - பாலகுமாரன்(பொய்மான் நாவலில்)
*****

33 comments:

  1. அடேங்கப்பா எம்புட்டு நீளம் இந்த எஸ்சே

    ReplyDelete
  2. சி.பி.செந்தில்குமார் said...
    போடு முத வெட்டை
    ///
    பதிவு போட்டு முடிச்ச உடனே பின்னுட்டம் போட்டுடிங்க ... என்னா வேகம் ... நன்றிங்க ...

    ReplyDelete
  3. அடேங்கப்பா எம்புட்டு நீளம் இந்த எஸ்சே
    ///
    ம்ம்கும் இதுவே 4 மாசமா டிராப்ட் ல இருந்துச்சு ...(தினமும் பெரிய பதிவா எப்படி போடுரகளோ...

    ReplyDelete
  4. கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  5. அசத்தலா எழுதி இருக்கீங்க சூப்பரா இருக்கு.....

    ReplyDelete
  6. உறவுக்காரப் பெண்ணை திருமணம் முடிக்கிறவர்களுக்கு காதல் வெறும் செய்தி தான் :)

    ReplyDelete
  7. கோவி.கண்ணன் said...
    உறவுக்காரப் பெண்ணை திருமணம் முடிக்கிறவர்களுக்கு காதல் வெறும் செய்தி தான் :)


    ///
    அவருக்குள்ளும் காதல் இல்லாவிட்டால் திருமணம் வீணகிவிடாதா ?

    ReplyDelete
  8. MANO நாஞ்சில் மனோ said...
    அசத்தலா எழுதி இருக்கீங்க சூப்பரா இருக்கு.....


    ////
    நன்றிங்க ...

    ReplyDelete
  9. sakthistudycentre-கருன் said...
    கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...

    ///


    நன்றிங்க ...

    ReplyDelete
  10. சும்மாவே காதலுக்கு கண்ணில்லேனு சொல்லுவாங்க, இம்பூட்டு அறிவுரை சொன்னா அப்புறம் காதலுக்கு காதும் கேக்காதுனு ஒரு புது கதை வுட்டுப்புட்டு மீண்டும் அதையே செய்ய ஆரம்பிச்சுடுவானுங்க.... லூசுலே வுடுங்க தல (பட்டாதான் தெரியும்னு சொல்லுவாங்க)

    ReplyDelete
  11. இன்றைய பாடல் இதையும் கொஞ்சம் பாருங்கள்
    http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_14.html

    ReplyDelete
  12. வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே, காதலாகி விடாது.குழப்பம் இங்குதான் வருகிறது.இதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  13. அன்பின் பிரபு - காதல் என்பது வர வேண்டிய வௌஅதில் - புரிந்துணர்வு உள்ள நிலையில் வரவேண்டும் - அதுவரை இப்படித்தான் - .... என்ன செய்வது - எனக்குத் தெரிந்த வரை - காதல் கல்யாணம் வெற்றி பெற்ற விழுக்காடு மிகக் குறைவே.

    ReplyDelete
  14. அப்துல்மாலிக் said...
    சும்மாவே காதலுக்கு கண்ணில்லேனு சொல்லுவாங்க, இம்பூட்டு அறிவுரை சொன்னா அப்புறம் காதலுக்கு காதும் கேக்காதுனு ஒரு புது கதை வுட்டுப்புட்டு மீண்டும் அதையே செய்ய ஆரம்பிச்சுடுவானுங்க.... லூசுலே வுடுங்க தல (பட்டாதான் தெரியும்னு சொல்லுவாங்க)

    \////

    (பட்டாதான் தெரியும்னு சொல்லுவாங்க)

    ஆமாங்க ...

    ReplyDelete
  15. பாட்டு ரசிகன் said...
    Nice..

    ///

    நன்றிங்க ...

    ReplyDelete
  16. சென்னை பித்தன் said...
    வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே, காதலாகி விடாது.குழப்பம் இங்குதான் வருகிறது.இதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    ///

    நன்றிங்க ...

    ReplyDelete
  17. cheena (சீனா) said...
    அன்பின் பிரபு - காதல் என்பது வர வேண்டிய வௌஅதில் - புரிந்துணர்வு உள்ள நிலையில் வரவேண்டும் - அதுவரை இப்படித்தான் - .... என்ன செய்வது - எனக்குத் தெரிந்த வரை - காதல் கல்யாணம் வெற்றி பெற்ற விழுக்காடு மிகக் குறைவே.

    /////

    நானும் அப்படித்தானே நினைக்கிறேன் , ஆனாலும் சரிதானான்னு குழப்பமா இருக்கும் , உங்களை போல பெரியவங்க சொல்லும் பொது சரிதான்னு தோனுது.. நன்றிங்க அய்யா

    ReplyDelete
  18. காதலிக்கும் போது காலம் செல்வது தெரிவதில்லை ...காலம் செல்ல செல்ல காதல் போவதும் தெரிவதில்லை :)

    முழிச்சுக்கோ .....சன் ரைஸ் குடிச்சுக்கோ :)

    ReplyDelete
  19. சரியான அலசல் பிரபு.. ஆனால் வேகம் இருக்கும் காதலில் நிதானத்தை இழந்து விடுகிறோம் பெரும்பாலும்...உண்மை சம்பவங்கள் யோசிக்க செய்கிறது..

    ReplyDelete
  20. WOW!!!!

    உங்கள் கருத்துக்களையும் இளம் வயது காதல் குறித்த கண்ணோட்டத்தையும் வாசிக்கும் பொழுது, உங்கள் மனப்பக்குவம் தெரிகிறது. காதலுக்கு கண்ணு இல்லை என்பதை விட, காதல் கண்ணை மறைக்கிறது என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீங்க.

    ReplyDelete
  21. Blogger தனி காட்டு ராஜா said...

    காதலிக்கும் போது காலம் செல்வது
    ...காலம் செல்ல செல்ல காதல் போவதும் தெரிவதில்லை :)
    /....///


    நன்றிங்க ...

    ReplyDelete
  22. Blogger பழமைபேசி said...

    நல்லா இருக்கு
    ////

    நன்றிங்க ...

    ReplyDelete
  23. தமிழரசி said...

    சரியான அலசல் பிரபு.. ஆனால் வேகம் இருக்கும் காதலில் நிதானத்தை இழந்து விடுகிறோம் பெரும்பாலும்...உண்மை சம்பவங்கள் யோசிக்க செய்கிறது..

    //////////

    உண்மை

    ReplyDelete
  24. சரியான அலசல் பிரபு.. ஆனால் வேகம் இருக்கும் காதலில் நிதானத்தை இழந்து விடுகிறோம் பெரும்பாலும்...உண்மை சம்பவங்கள் யோசிக்க செய்கிறது..

    February 15, 2011 11:03 AM
    Delete
    Blogger Chitra said...

    WOW!!!!

    உங்கள் கருத்துக்களையும் இளம் வயது காதல் குறித்த கண்ணோட்டத்தையும் வாசிக்கும் பொழுது, உங்கள் மனப்பக்குவம் தெரிகிறது. காதலுக்கு கண்ணு இல்லை என்பதை விட, காதல் கண்ணை மறைக்கிறது என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீங்க.
    ///

    நன்றிங்க ...

    ReplyDelete
  25. அருமையான பதிவு

    காதல் ஒரு பெரிய விஷயம் ரகசியம் புரிவது சில பேருக்குதான்
    என் பிள்ளை எனை கேட்டான் அப்பா valentines dayக்கு எனக்கு gift கிடையாதான்னு , என் இனியவள் அவனிடம் இது ஒன்லி ஃபார் லவ்ட் ஒன்ஸ் என்றாள், அதற்க்கு என் மகன் என்னையும் தானே நீங்க love பன்றீங்க அப்ப எனக்கு அப்பா கிட்டேருந்து ஒண்ணு அம்மாகிட்டேருந்து ஒண்ணு பரிசு வேணும்னான்
    நான் ரொம்ப ரசிச்சேன் ஆமாம் காதல் பாசத்தோடு இணைந்தது பலர் இங்கே
    காமத்தோடும் இளவயது கவர்ச்சியோடும் குழப்பிக்கொள்கிறார்கள்

    ரொம்ப நல்லா இருந்தது பிரபு

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  26. காதல் தப்பு இல்லை...ஆனால் அது எந்த புரிதலில் ஆரம்பிக்குதோ அதே புரிதலோட கல்யாணத்துக்கு பிறகும் நீடிக்கிரதை பொறுத்து தான் காதலின் உண்மையான வெற்றி இருக்கு...இல்லாட்டி ஆசை அறுவது நாள்..மோகம் முப்பது நாள் கணக்கு தான்...வேற என்னத்தை சொல்ல...ம்ம்..

    ReplyDelete
  27. அருமையான தேவையான பதிவுதான் மிக்க நன்றி...!

    ஆனால்
    //காதல் தப்பில்ல,ஆனா 19 வயசுல வருவது காதல் அல்ல வெறும் இன்கவர்ச்சி. //

    ஒரே உணர்வு, ஒரே சந்தோஷம், ஒரே வலி... இவை எல்லாமே ஒன்றாய் இருக்கும்போது, 19 வயதில் வந்தால் அது இனக்கவர்ச்சி என்றும், 20 கு மேல் வந்தால் அது காதல் என்றும், வயதை காரணங்காட்டி நாமாகவே அவர்கள் காதலுக்கு( நீங்கள் சொல்லும் 19) க்கு “இனக்கவர்ச்சி” எனும் ஒரு முகமூடியை அணிவிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது...! அப்படியென்றால் 19 வயதில் ஒருவன் உண்மையாக காதலிக்க முடியாதா?

    //ஒரு சேலை எடுக்கவே பத்து கடை ஏறும் பெண்களே , வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் ஏன் இப்படி அவசரம்? ...//
    இதன் அர்த்தம் என்ன? ஒரு துணையை தேடிக்கொள்ள( காதல் அல்லது திருமணம்) பத்து பேருடன் பழகி சிறந்ததை தேர்ந்தெடுக்க சொல்கிறீர்களா? இரண்டுக்கும் வித்தியாசமில்லையா?

    பி.கு: என் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்!

    ReplyDelete
  28. அட ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க. அதிலும் இந்தக் காலத்துக் காதலப் பத்தி ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்லை. ரொம்ப கொடுமைங்க. ஆனா எனக்கும் இணைக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் புரியமாட்டேங்குது.

    நான் சொல்லவர்றது என்னனா இனக்கவர்ச்சியோ காதலோ அவுங்க தேர்ந்தெடுக்கிற துணை அவுங்க வாழ்க்கையை சரியான அதாவது மகிழ்ச்சியான பாதையில் அழைத்து செல்லுமானால் அது சரிதான். அது எந்த வயசா இருந்தாலும் சரிதான்.

    அதாவது ஒருத்தர் 18 வயசுல இருக்குற தெளிவு இன்னொருத்தருக்கு 30 வயசுல கூட இருக்கிறதில்லை. அதனால கண்டிப்பா வயதை விட சமூகம் , வாழ்க்கை பற்றின புரிதலோட காதலிக்கிறவங்க கண்டிப்பா மோசம் போக மாட்டங்கன்னு நினைக்கிறேன் ..

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...