Monday, August 29, 2011

மணற்கேணி - 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூரில் ...



          மணற்கேணி 2010 - ன் வெற்றியாளர்கள்  திரு லதானந்த்,செல்வன் ஜெ லியோ ப்ராங்களின், செல்வி வே.பத்மாவதி ஆகிய மூவரும் கடந்த சனி கிழமை (27 /08/2011) காலை சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்கள் . கடந்த முன்று நாட்களாக அவர்கள் சிங்கப்பூரில் பல  இடங்களை  சுற்றி பார்த்து மகிழ்ந்தார்கள் .இவற்றின் இடையே ஞாயிறு அன்று மாலை சிங்கை அன்-மோ-கியோ நுலகத்தில் உள்ள தக்காளி அறையில் (tomoto room ) "வாசகர் வட்டம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் . அங்கு வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொண்டார்கள் .பின்  காலங்க் சமூக மன்றத்தில்  நடைபெற்ற  கவிமாலை நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.


புகைப்படங்கள்

















அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்
 

Friday, August 26, 2011

மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூர் வருகை



மணற்கேணி 2010 முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் வரும் 27 ஆகஸ்ட் 2011 முதல் 3 செப் 2011 வரை சிங்கப்பூர் சுற்றுலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வர இருக்கின்றன.

வெற்றியாளர்கள்

தமிழ் அறிவியல் பிரிவு : திரு லதானந்த்
அரசியல் / சமூகம் : செல்வன் ஜெ லியோ ப்ராங்களின்
தமிழ்மொழி இலக்கியம் : செல்வி வே.பத்மாவதி

வெற்றியாளர்களுக்கான நிகழ்ச்சிகள்:

நாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம் : அங்க்மோக்யோ நூலகம்
நிகழ்ச்சி : வாசகர் வட்டம்
வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வெற்றியாளர்களை அறிமுகம் செய்து, பதிவர்கள்
குழலி - நாட்டுப்புறப் பாடல்கள்
ஜோசப் பால்ராஜ் - மரபுசாரா ஆற்றல் வளம் மற்றும்
சமச்சீர் கல்வி - ரோஸ்விக் ஆகியோர் விமர்சனம் செய்கிறார்கள். விழாவில் தேனீர் மற்றும் சிற்றுண்டி அங்மோகியோ நூலக பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
*

நாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 7:00 முதல் 9:00 வரை
இடம் : காலங்க் சமூக மன்றம்
நிகழ்ச்சி : கவிமாலை
இந்நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வர்
*

நாள் : 30/ஆகஸ்ட்/2011 செவ்வாய் கிழமை, நேரம் : மாலை 5 மணி - 8 மணி வரை
இடம் : சாங்கி கடற்கரை பூங்கா
நிகழ்ச்சி : வெற்றியாளர்களுடன் வெந்தழல் உணவு (BBQ)
          பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு வெந்தழலில் சுட்டு உண்டு, கலந்து பேசும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.  அன்று ஹரிராயா (ரம்ஜான்) விடுமுறை ஆதலால் சிங்கப்பூர் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்
நிகழ்ச்சிகள் அனைத்தும் விடுமுறை நாட்களில் நடப்பதால் சிங்கைப் பதிவர்களும் வாசகர்களும், தவறாது கலந்து கொள்ள அழைக்கப்பட்டு, வெற்றியாளர்களை சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்தவர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரை வழங்கியவர்கள், தமிழ்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்

அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்


.

Monday, August 22, 2011

கன்னம் சிவந்த கிளி



"வீட்டில் கிளி வளர்க்கலாம் என்றால்
வேண்டாம் என்கிறார் அப்பா" -என்று  
வருத்தப்பட்ட  அவளிடம்..

"ஒரு வீட்டில் இரண்டு கிளிகள் எதற்கு
என எண்ணியிருப்பார் அவர் "- என்றேன் நான்..
கிளிக்கு கன்னங்கள்  சிவந்தது
வெட்கத்தில்...



******************************
பிரியமுடன் பிரபு......

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...